பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பசங்க 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குழந்தைகள் படம் வருகிறது. கத சொல்ல போறோம் என்பது படத்தின் டைட்டில். குறும்பட இயக்குனர் கல்யாண் தயாரித்து, இயக்கி உள்ளார். ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி உள்ளிட்ட 20 குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெமின் ஒளிப்பதிவு செய்துள்ளார், பவன் இசை அமைத்துள்ளர்.
படம் குறித்து இயக்குனர் கல்யாண் கூறியதாவது: இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தைகளும் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். ஒரு முறையாவது தனது அம்மாவை பார்த்து விட முடியாத ஏக்கம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம்.
குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல் ஒரு மெசேஜ் சொல்ற படமாகவும் இருக்கும். இந்த படத்திற்கு வரிவிலக்கு கேட்டு இந்த படத்தை திரையிட்ட போது வரிவிலக்கு அதிகாரிகளாக வந்த வி.எஸ்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.என்.ராஜம் ஆகியோர் படத்தை பார்த்து அழுது விட்டனர் படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர் என்றார் இயக்குனர் கல்யாண்.