ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காசு வாங்கி ஓட்டு போடுவதை விட கேவலம் வேறு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் முதன் முறையாக ஒரே படத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்துள்ளார். 'தசாவதாரம்' படத்தில், நகைச்சுவைக் கதாபாத்திரமாக விளங்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தைத்தான் ஒரு முழுநீள படத்திற்குரிய கதாபாத்திரமாக இந்தப் படத்தில் கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார். மலையாள இயக்குநர் ராஜீவ் குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
அதன்பின்னர் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது அவர் பேசும்போது... ''ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இப்படத்தை எடுக்கிறோம். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. நிறைய ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சபாஷ் நாயுடு படத்தை மார்ச் மாதமே துவங்க திட்டமிட்டோம், அதுமுடியவில்லை. இப்போது மே மாதம் நடுவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பிக்க உள்ளோம். ஜூன் வரை அங்குதான் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பின்னர் ஜூலைக்கு மேல் தமிழ்நாட்டில் மீதி படங்களை எடுக்க உள்ளோம். இந்தப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்களும், நம்மூர் கலைஞர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்றவர் என்னுடைய பலம் இந்தியாவில் தான் உள்ளது என்றார்.
இளையராஜா குறித்து பேசிய கமல், எனக்கும், இளையராஜாவுக்கும் எப்போதும் இடைவெளி வந்ததே கிடையாது. படங்களில் வேண்டுமானால் அவருடைய பெயர் இல்லாமல் இருக்காமல் மற்றபடி நாங்கள் ஒன்றாகவே பயணிக்கிறோம் என்றவர் தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என்று கூறினார்.
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது கடமையை செய்ய வேண்டும். காசு வாங்கி கொண்டு ஓட்டுப்போடக்கூடாது. அதைவிட கேவலம் வேறு எதுவும் கிடையாது. ஒருவேளை நீங்கள் காசு வாங்கி ஓட்டுப்போட்டீர்கள் என்றால், நீங்கள் அரசியல்வாதியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. அதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எனவே யாரிடமும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கமல் கூறினார்.