'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பர்கான் அக்தர். 'பாக் மில்கா பாக்' படம் மூலம் ஒரு நடிகராக பிரபலமானார். இப்படம் இந்திய தடகளவீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இதனிடையே சமீபத்தில் பிரேசிலில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கானை நியமித்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். இதற்கு மில்காசிங், யோகஸ்வர் தத் போன்ற வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் சல்மானுக்கு ஆதரவாக சில நடிகர்களும் குரல் கொடுத்தனர். இப்போது மில்கா சிங்கிற்கு ஆதரவாக நடிகர் பர்கான் அக்தர் பேசியிருக்கிறார்.
பர்கான் கூறியுள்ளதாவது... ''மில்கா சிங், தன்னுடைய கருத்தை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. சல்மானுக்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. யாரை நியமிப்பது என்று நாம் முடிவு செய்யமுடியாது. இந்திய ஒலிம்பிக் சங்கம் இவர் சரியாக இருப்பார் என்று ஒருவரை நியமித்தால் அவரை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இங்கு யாரும், யாரைப்பற்றியும் தவறாக பேசவில்லை, ஆனால் மீடியாக்கள் தான் தேவையில்லாமல் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பெரிதுப்படுத்தி பிரச்னைக்கு உள்ளாக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.