கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
1976ம் ஆண்டு இயக்குனர் ராம. நாராயணன் உருவாக்கிய தயரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை அவரே தயாரித்தார். சிறு பட்ஜெட் படங்கள், விலங்குகளை வைத்து இயக்கும் படங்கள் அவரது பாணி. சகாதேவன் மகாதேவன், ஆடிவெள்ளி, தங்கமணி ரங்கமணி, மனைவி ஒரு மாணிக்கம், பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, குட்டிபிசாசு, மண்ணின் மைந்தன், கோட்டை மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் ஆகியவை முக்கிய படங்கள். ராம நாராயணன் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராமசாமி பொறுப்புக்கு வந்தார். அவர் பெரிய படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய படங்களை வாங்கி விநியோகிக்கவும், திரையிடவும் ஆரம்பித்தார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், தில்லுக்கு துட்டு படங்களை தயாரித்து வருகிறார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி மொழிகளில் 99 படங்களை தயாரித்துள்ளது. இதன் 100வது படத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. 3 மொழிக்கும் பொதுவான டைட்டில் வைக்கப்பட்டு மூன்று மொழியைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
தேனாண்டாள் பிலிம்சின் பிரமாண்ட தயாரிப்பாக இது இருக்கும் என்கிறார்கள். பாகுபலி பாணியிலான வரலாற்று கதை என்கிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏவிஎம் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் பிடித்துள்ளது. இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்துள்ளது.