தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையின் போட்டிகள் வலுத்துள்ள நிலையில் ஒவ்வொரு டி.வி,யும் புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ராஜ் டிவி தமிழ் பேசும் நாயகி என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியொன்றை நடத்துகிறது. பெரிய திரையில் இருக்கும் தமிழ் கதாநாயகி பஞ்சத்தை போக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கதாநாயகி தேர்வு நடந்து முடிந்தது. தமிழர்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் தமிழ் பேசும் பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து மும்பை, டெல்லி என பல இடங்களில் தேர்வு நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால், இறுதிச்சுற்றில் வெற்றிபெறும் பெண்களுக்கு பிரபல டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சற்குணம் ஆகியோர் தங்கள் படங்களில் கதாநாயகி வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பதுதான். கதாநாயகி ஆக வேண்டும் என விரும்பும் தமிழ் பேசத்தெரிந்த புதுமுகங்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இணைப்பான இந்த நிகழ்ச்சி பெரிய திரையில் உள்ள கதாநாயகி பஞ்சத்தையும் போக்கும் என்பது ராஜ் டிவியின் கருத்து.