அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜயசேதுபதிக்கு ஒருநாள்கூட லீவு இல்லையாம். காலை தொடங்கி இரவு வரை படப்பிடிப்பில்தான் இருக்கிறார். இடையில் ஓரிரு நாட்கள் இடைவெளி கிடைத்தால் டப்பிங் வேலைகளை செய்கிறார். இருப்பினும், தன்னை யாராவது ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால் அது சிறிய நடிகரின் படமாக இருந்தாலும் அவசியம் ஆஜராகி விடுகிறார் விஜயசேதுபதி. விழா முடியும் வரை அமர்ந்திருந்து யூனிட்டை மனதார வாழ்த்தி விட்டு செல்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அசார்-ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள சாரல் படத்தின் ஆடியோ விழாவுக்கு வருகை தந்திருந்தார் விஜயசேதுபதி. அப்போது அப்பட நாயகியான ஸ்ரீ பிரியங்கா, என்னிடம் என்ன குறை, நடிப்பு இல்லையா? அழகு இல்லையா? தமிழ் பெண் என்ற ஒரே காரணத்திற்காக என்னை ஓரங்கட்டுவதா? என்று பீல் பண்ணி பேசினார். அதையடுத்து பேசிய விஜய சேதுபதி, ஸ்ரீபிரியங்கா பீல் பண்ண வேண்டியதில்லை. உங்க திறமைக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். தமிழ் சினிமாவில் நீங்களும் பெரிய நடிகையாக வருவீர்கள் என்று வாழ்த்தி பேசினார்.
அதோடு, விழா முடிந்து விடைபெறும்போது, சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்கும்போது சொல்றேன் என்று காத்துவாக்கில் நடிகையின் காதில் சொல்லி விட்டு சென்றாராம். ஆக, விஜயசேதுபதியிடமிருந்து அழைப்பு வரும் என்று ஆவலில் காத்துக்கொண்டிருக்கிறார் பிரியங்கா.