தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவான சிவகார்த்திகேயன், டிவியில் இருந்தபோதே தனது வார்த்தை ஜாலத்தால் நிறைய ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார். அதனால் சினிமாவிலும் காமெடி கலந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், என்னுடைய ஒவ்வொரு படங்களிலுமே ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நான் முயற்சி செய்வதுண்டு. என்றாலும், அதிகமாக ரிஸ்க் எடுக்க நான் தயங்குகிறேன்.
காரணம், ரசிகர்களைப்பொறுத்தவரை தியேட்டருக்கு வந்து ஜாலியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். ஒரு இரண்டு மணி நேரம் தன்னை மறந்து சிரிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் நான் எனது ஒவ்வொரு படத்தின் கதையையும் காமெடிக்கு முன்னுரிமை கொடுத்து ஓகே செய்கிறேன். இப்போது நடித்து வரும் ரெமோ படத்தில் கூட காமெடி நிறைய உள்ளது. சிவகார்த்திகேயன் படமென்றால் சந்தோசமாக இருந்து விட்டு வரலாம் என்று நம்பி தியேட்டருக்கு வருபவர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் நான் எப்போதுமே கவனமாக இருக்கிறேன் என்கிறார் அவர்.