சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் கமல்ஹாசன் ஒரேநாளில் மூன்று படங்களை துவக்குகிறார், இதற்காக நடிகர் சங்க வளாகம் தயாராகியுள்ளது. தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதோடு மேலும் இரண்டு படங்களையும் ஆக மொத்தம் மூன்று படங்களை ஒரேநாளில் ஆரம்பிக்கிறார் கமல். இதுகுறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா.? என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு புரெடாக்ஷன் நம்பர் 41, 42, 43 என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன். இப்படங்களின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் ஏப்.,29ம் தேதி(நாளை) நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஏற்கனவே தன் படத்தை நடிகர் சங்க வளாகத்தில் துவக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்க வளாகம் பிரத்யேகமாக தயாராகியுள்ளது. சங்க வளாகத்தில் சாமியானா பந்தல் எல்லாம் போடப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராகியுள்ளது.
பாபநாசம் படத்திற்கு பிறகு கமலின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறுகியகாலத்தில் படங்களை தயாரித்து வெளியிட உள்ளார். அதன்படி தற்போது மூன்று படங்களுக்கான பூஜையை நாளை போட இருக்கிறார்.