ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
லண்டனைச் சேர்ந்த அக்மார்க் ஆங்கில பொண்ணு எமி ஜாக்சன். மதராசபட்டினம் படத்தில் ஆங்கில பெண்ணாகவே நடிக்க அழைத்து வரப்பட்டவர் தற்போது தமிழ் பெண்ணாக மாறி நடித்து வருகிறார். தமிழ், இந்தியில் நடித்து வரும் எமி ஜாக்சன் சென்னையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்தார். இதற்காக சென்னையில் தீவிரமாக வீடு தேடினார். கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீடு பார்த்து முடிவு செய்தார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, இப்போது அடித்து நொறுக்கிற கொடும் வெயில் இவற்றைக் கண்டு பயந்த எமி மும்பையில் குடியேற முடிவு செய்தார்.
தீவிர வீடு வேட்டைக்கு பிறகு தற்போது மும்பை பகுதியில் வீடு பார்த்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அம்மாவுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி அதிகமான இந்தி படங்களில் நடிப்பதற்காகேவ எமி மும்பையில் குடியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையை விட மும்பையில் ஓட்டல் வாடகை அதிகம் என்பதால் அவர் மும்பையில் குடியேறியுள்ளார் என்றும் கூறுகிறார்கள். “மும்பையில் குடியேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள இதுதான் வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் எமி.