'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ஜெய். விஜய் நடித்த 'பகவதி' படத்தில் அவரது தம்பியாக நடித்தவர், அதன்பின்னர் சென்னை-28 படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'எங்கேயும் எப்போதும்' படம் அவரை பேச வைத்தது. அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் சறுக்கிய போதும் அட்லியின் 'ராஜா ராணி' படம் ஜெய்யை கொஞ்சம் தூக்கிவிட்டது. இருப்பினும் ராஜா ராணிக்கு பிறகு, அவர் நடித்த படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. குறிப்பாக அவர் பெரிதும் நம்பிய 'புகழ்' கூட அவருக்கு புகழை தரவில்லை.
இந்நிலையில், 'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கும் புதிய படத்தில் ஜெய் நடிக்க இருக்கிறார். படத்திற்கு ''ராட்சஸன்'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராட்சஸனில் ஜெய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சிவி குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார்.
''சிவிகுமார் தயாரிப்பில், ராம் இயக்கத்தில் ''ராட்சஸன்'' படத்தில் நடிக்கிறேன், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு முடிவானதும் விரைவில் அறிவிக்கப்படும்'' என தன் டுவிட்டர் பக்கத்தில் ஜெய் குறிப்பிட்டுள்ளார்.