'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சங்க வேலைகள், தன் பட வேலைகள் என பிஸியாக சுற்றி வருகிறார் நடிகர் விஷால். தற்போது முத்தையாவின் 'மருது' படத்தை முடித்திருப்பவர், அடுத்தப்படியாக மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்திலும், அதற்கு அடுத்தப்படியாக சுராஜ் இயக்கத்தில் கத்திச்சண்டை படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஷாலை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கன்னடம் மற்றும் தமிழில் நான் ஈ சுதீப்பை கொண்டு 'முடிஞ்சா இவன பிடி' என்ற படத்தை இயக்கியிருக்கும் கேஎஸ்.ரவிக்குமார், அந்த படவேலைகள் எல்லாம் முடிந்த பின்னர் விஷாலை கொண்டு படம் இயக்குவார் என தெரிகிறது. இவர்கள் இணையும் இப்படம் ஆக்ஷ்ன், பிளஸ் காமெடியுடன் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.
தற்போது விஷால் நடிப்பில் 'மருது' படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இதுதவிர ஏற்கனவே அவர் நடித்து இரண்டாண்டுகளாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படமும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இதில் எந்தப்படம் முதலில் வெளிவரும் என காத்திருந்து பார்ப்போம்.