தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதற்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வெளியானது. ஆனால் இதனை நயன்தாரா மறுத்திருக்கிறார். “சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கவில்லை. இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் 100வது படமான கவுதபுத்ரசட்டக்கர்னி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் பாலகிருஷ்ணாவின் அம்மாவாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹேமமாலினி நடிக்கிறார். வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவை ஆண்ட சட்டகர்னி ராஜாவின் கதை. பாகுபலியை விட பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். நயன்தாரா இளவரசியாகவும், ராணியாகவும் இரண்டு கெட்அப்களில் நடிக்கிறார்.