'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைப்படத் தணிக்கையில் சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு பெங்காலி இயக்குனர் ஷியாம் பெனகல் தலைமையில் சீரமைப்பு குழு ஒன்றை அமைத்தது. இதில் கமல்ஹாசன், இயக்குன் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, அட்மன்ட பியூஸ் பாண்டே, பத்திரிகையாளர் பாவனா சோமய்யா உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு தனது அறிக்கையை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பித்துள்ளது. நீண்ட அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
•தணிக்கை துறை என்பது ஒரு படத்தை எந்தெந்த வயதினர் பார்க்கலாம், பார்க்ககூடாது என்பதை வரையறு செய்து சான்றிதழ் வழங்கும் அமைப்பு மட்டுமே.
•ஒரு படத்திற்கு அதன் கதையோட்டம் பாதிக்காத அளவிற்கு குறைந்த அளவிலான கட் கொடுத்து அதற்கேற்ப சான்றிதழ் வழங்க வேண்டும்.
•யு மற்றும் யூ/ஏ சான்றிதழ்களை 12 பிளஸ், 15 பிளஸ் என்று பிரித்து வழங்கலாம். அதாவது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்று வகைப்படுத்தலாம்.
•ஏ சான்றிதழை ஏ மற்றும் ஏசி என்ற இரண்டு சான்றிதழாக பிரித்து வழங்கலாம். ஏசி என்பது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதை குறிக்கும்.
இது தவிர மேலும் பல முக்கியமான விதிமுறைகளை சீரமைப்பு குழு வகுத்து கொடுத்துள்ளது.