தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை', 'இறைவி', 'தர்மதுரை' ஆகிய நான்கு படங்கள் ரெடியாக ரிலீசுக்கு தயாராக காத்திருக்கிறது. இவற்றில் 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை' இரண்டு படங்களும் காப்பி ரெடியாகி வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. நடிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது. அது ரிலீஸ் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன என்ற கொள்கையில் இருக்கும் விஜய்சேதுபதி அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க கமிட்டாகி, அட்வான்ஸை வாங்கிப்போட்டுக் கொண்டே இருக்கிறார்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் தேவா, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கே.வி.ஆனந்த் இயக்கும் படம், தனுஷ் தயாரிக்கும் படம் என ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள விஜய்சேதுபதி, லேட்டஸ்டாக 'ரெக்கை' என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தைத் தயாரிப்பது விஜய்சேதுபதி நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த 'காமன் மேன்' பி.கணேஷ். இவர் விஜய்சேதுபதியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் விஜய்சேதுபதியின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஐந்து படங்கள் லைன்அப்பில் இருக்க அந்தப்படங்களை பெண்டிங்கில் வைத்துவிட்டு ரெக்க படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.
'வா டீல்' படத்தை இயக்கியிருக்கும் ரத்தின சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் முதன் முதலாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லட்சுமி மேனன்! விஜய் சேதுபதி(சிறப்பு தோற்றம்), 'ஜிகர்தண்டா'படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் என்றாலும் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் 'ரெக்கை' தான். இப்படத்தின் பூஜை மே மாதம் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மே 11-ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.