ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேசிலில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம் நடிகர்கள், சல்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை ஹேமமாலினி ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது பாலிவுட் நடிகர் ரஷா முராத்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது...
சல்மான்கான் இந்த நாட்டின் குடிமகன். அவர் ஒரு சூப்பர் ஸ்டாரும் கூட. ஒருவேளை அவர் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்படவிட்டாலும் அவருக்கு எந்த பாதிப்பும் வரப்போவது கிடையாது. இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. நல்லெண்ண தூதராக சல்மான் தேர்வு செய்யப்பட்டிருப்பது, நிறைய இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வழிவகை செய்யும். சிலர் தேவையில்லாமல் இதை பிரச்னையாக கிளப்புகிறார்கள். மில்கா சிங், சினிமா துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். பாக் மில்கா பாக் படம் மூலம் அவரை மீண்டும் பிரபலமாக்கியது இந்த சினிமா துறை தான், அதை அவர் மறந்துவிடக்கூடாது. மில்கா சிங் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது, ஆனால் அவர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வாங்கவில்லை. சல்மான் தவிர்த்து வேறு யாராவது இந்த பதவிக்கு பொருத்தமானவர்கள் என்றால் அது அபினவ் பிந்த்ரா மட்டும் தான். ஆனால் அவரே சல்மான் நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.