வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் 24 படத்தில் சூர்யாவுடனும், விக்ரமுடன் இருமுகன் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும், சுதீப்புடன் முடிஞ்சா இவனப் புடி படத்தில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட. மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
நித்யா மேனன் ஒரு பாடகியும் கூட என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. நித்யா மேனன் பாடும் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 24 படத்திற்காக தெலுங்கில் ஒரு பாடலைப் பாட வைத்துள்ளார். லாலிஜோ... என்ற பாடலை அற்புதமாகப் பாடியிருக்கிறார் நித்யா மேனன். ஆனால், இந்தப் பாடலைத் தமிழில் சக்தி ஸ்ரீ கோபாலனைப் பாட வைத்துவிட்டார் ரகுமான். தமிழிலும் நித்யா மேனனே பாடியிருந்தால் இங்கும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
இருந்தாலும் தெலுங்கில் நித்யா மேனன் பாடிய பாடலுக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம். ரகுமான் இசையில் பாடியதன் மூலம் தன்னுடைய கனவு நனவானதாக நித்யா மேனன் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளாராம். மலையாள நடிகைகள் மற்ற மொழிகளில் பாடி பெயர் வாங்குவது நித்யா மேனன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இப்போதைய நடிகைகளில் நித்யா மேனன்தான் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.