பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வட்டாரம் படத்தில் அதிசயாவாக அறிமுகமாகி வசுந்தராவாக மாறியவர் தற்போது புத்தன் இயேசு காந்தி படத்தில் நடித்து வருகிறார். தனது அந்தரங்க படங்கள் இணைய தளங்களில் வெளியானதால் அப்செட்டில் இருந்தவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரதம்பிருக்கிறார். “நிஜ வாழ்க்கையில் பத்திரிக்கையாளராக ஆசைப்பட்டேன். ஆனால் நடிகையாகிவிட்டேன். நான் ஆசைப்பட்ட பத்திரிகையாளர் வாழ்க்கையை புத்தன் யேசு காந்தி படத்தில் வாழ்ந்து வருகிறேன்'' என்கிறார் வசுந்தரா.
அவர் மேலும் கூறியதாவது: நான் என்றைக்கும் படங்களின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு மனதிருப்தி உள்ள பாத்திரங்களில்தான் நடிப்பேன். வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன். அப்படிப்பட்ட படங்களில் நடிக்க நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது மைக்கேல் ஆகிய நான் ,புத்தன் இயேசு காந்தி என்று இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இதில் மைக்கேல் ஆகிய நான் ஒரு ஹாரர் படம். புத்தன் இயேசு காந்தி சற்றே மாறுபட்ட படம். இதில் எது முதலில் வந்தாலும் அது என் பத்தாவது படமாக இருக்கும். இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். அது ஒரு பீரியட் பிலிம். சிலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை.
எனக்கு மீடியாவில் ஆர்வம். ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான். இப்போது நான் நடித்துள்ள புத்தன் இயேசு காந்தி படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். என்னைப் பத்திரிகையாளர்கள் பலரும் பாதித்து இருக்கிறார்கள் அவர்களின் பாதிப்பு அந்தக் கேரக்டரில் இருக்கும்.. புத்தன் இயேசு காந்தி படத்தின் இயக்குநரும் ஒரு பத்திரிகையாளர்தான் என்பதால் அவர் சொன்னபடிதான் நடித்தேன். என்கிறார் வசுந்தரா.