பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர்கள் பத்திரிக்கை தொடங்குவது புதிய விஷயம் இல்லை. டி.ராஜேந்தர் உஷா என்ற பத்திரிக்கை தொடங்கி நடத்தினார். கே.பாக்யராஜ் பாக்யா என்ற பத்திரிக்கையை இப்போதும் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்து சூர்யாவும் பத்திரிக்கை தொடங்குகிறார். அவர் நடத்தும் அகரம் பவுண்டேஷன் சார்பில் யாதும் என்ற பெயரில் மாத இதழ் தொடங்குகிறார். இதன் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரியில் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு வெளியிடுகிறார். சூர்யா சிறப்புரையாற்றுகிறார். பத்திரிக்கை தொடங்குவது குறித்து அகரம் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில், அகரம் பவுண்டேசன் உருவாக்கிய "யாதும் ஊரே" திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருகின்றன.
ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைக்கவும், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யாதும் எனும் மாத இதழ் ஒன்றை வெளியிட திட்டமிட்டுளோம். கருத்து மாற்றத்தை அனைவரிடமும் விதைப்பதே யாதும் மாத இதழின் முதன்மையான நோக்கம். சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நிகழ்வுகள் பற்றியும், நபர்கள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும், தமிழ் மொழியில், முழுமையான சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கும் இதழாக யாதும் அமையும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.