தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி குழுவில் ஒருவராக அறிமுகமானவர் ஸ்ரீநி. அதன் பிறகு வேலூர் மாவட்டம், மதராச பட்டினம், தாண்டவம், தலைவா படங்களில் நடித்தார் என்றாலும் ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது களம் படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். இதுபற்றி ஸ்ரீநி கூறியதாவது:
இணை இயக்குனராக நான் வாய்ப்பு தேடி சென்ற போது தான் என்னை நடிப்பதற்கு தேர்வு செய்தனர். அப்படித்தான் நான் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானேன். ஏற்கனவே நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவங்கள் எனக்கு நடிப்பதற்கு கை கொடுத்து உதவியது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் திருப்பம் ஏற்படும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது தலைவா திரைப்படம். நடிப்பு என்னும் வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது.
களம் திரைப்படத்தின் கதையை கேட்ட அடுத்த நொடியே இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையம்சம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் நம்பகத்தன்மையாக அமைய வேண்டும் என்பதற்காக நான் யதார்த்தமாகதான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார், நானும் அவ்வாறே செய்தேன். அதன் பலனையும் படத்தின் பிரத்தியேகக் காட்சியில் படம் பார்த்தவர்கள் பார்த்து பாராட்டும் போது அடைந்து விட்டேன்" என்றார் ஸ்ரீநி.