ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யா-சமந்தா இருவரும் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில்தான் இணைந்தனர். அதோடு அந்த படத்தில்தான் முதன்முறையாக டூ-பீஸ் உடையில் நடித்து இளவட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா. முன்பு நடித்த படங்களை விடவும் சூர்யாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடினார். அதன்காரணமாக அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றபோதும், சூர்யா-சமந்தாவின் நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில், மீண்டும் அவர்கள் விக்ரம்குமார் இயக்கியுள்ள 24 படத்திலும் இணைந்திருக்கிறார்கள். டைம் மிஷின் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இதில் முதன்முறையாக 3 விதமான வேடங்களில் நடித்துள்ளார் சூர்யா. அதோடு, சூர்யா-சமந்தாவின் லவ் போர்ஷனை சிறப்பாக படமாக்கியிருக்கிறாராம் விக்ரம்குமார். அதனால் அவர்கள் இருவருமே ரொமான்ஸ் காட்சிகளில் மிக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம். இந்த காட்சிகளில் நடித்து முடித்து மானிட்டரில் ரசித்த சூர்யா, சமந்தாவின் ரொமான்ஸ் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.