தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோலிசோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன் அப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தார். அடுத்து, விக்ரமை வைத்து பெரிய பட்ஜெட்டில் 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார். இந்தப்படம் மாபெரும் தோல்வியடைந்ததால் விஜய்மில்டனின் மவுசு குறைந்துபோனது. எனவே மீண்டும் லோ பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து அடுத்தப் படத்தைத் தொடங்க இருந்தார்.
ராஜேந்தரிடம் கதை சொல்லி அவர் ஓகே சொல்லி, படத்துக்கு பன்முக நாயகன் என்று டைட்டில் வைத்து வேலைகளை தொடங்கியநிலையில், பேசிய சம்பளத்தைவிட டி.ராஜேந்தர் பல மடங்கு அதிகமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் கடுப்பான விஜய் மில்டன், ஓசியில் நடிக்க சம்மதித்தால் கூட இனி டி.ஆர். நமக்கு வேண்டாம் என்று தீர்மானித்து டி.ஆருக்கு பதில், தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக கமிட் பண்ணி படத்தை தொடங்கினார்.
இந்தப் படத்தில் தெருக்கூத்து கலைஞனாக நடிக்கிறார் ராஜகுமாரன். ராஜகுமாரன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார். கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் விஜய்மில்டன். தற்போது ஏறக்குறைய 75 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார். படத்துக்கு கடுகு என டைட்டில் வைத்துள்ளார். அதாவது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வோமே? அதான் கடுகு படத்தின் கதை.