விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
நடிகர் கரண் சிங் குரோவரும், நடிகை பிபாஷா பாசுவும் வருகிற ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்கள். முன்னதாக ஏப்ரல் 29ம் தேதி மெகந்தி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது திருமண வேலைகளில் இருவரும் பிஸியாக இருக்கின்றனர். திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு வழக்கமாக திரையுலகினர் கலந்து கொள்ளும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். ஆனால் பிபாஷாவும், கரணும் திருமண வரவேற்பு நடத்தவில்லையாம், மாறாக தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துக்கு மட்டும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.