தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தபோதும் பேய் வேடத்தில் நடிப்பது எனக்கு நல்லதொரு அனுபவமாக உள்ளது. என்கிறார் சின்னத்திரை நாயகி பிரியங்கா.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் நான், அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கதைப்படி இதில் நான் பேயாக நடிக்கிறேன். அதாவது நான் இறந்த பிறகும் எனது காதலரை தொடர்வேன். அந்த வகையில், மற்றவர்களின் கண்களுக்கு தெரியும்போது கறுப்பு கலர் புடவையில் தோன்றும் நான், எனது காதலர் கண்களுக்கு அவர் எனக்கு பரிசாக கொடுத்த சிவப்பு கலர் புடவையில் தெரிவேன்.
அதோடு, உயிரோடு இருக்கும்போது உயிருக்கு உயிராக அவரை காதலித்ததால் உயிர் பிரிந்த பிறகும் அவரை பிரிய முடியாமல் தவிக்கிற கேரக்டர் என்பதால் காதல் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறேன். கடந்த 3 மாதங்களாக இந்த கேரக்டரில் நான் நடித்து வருவதால், சில நாட்களில் நான் தூங்கும்போது கனவில்கூட அந்த பேய் கேரக்டரில் நடிப்பது போலவே உணர்கிறேன். அந்த அளவுக்கு அந்த ரோல் என்னை இம்ப்ரஸ் செய்துள்ளது என்று கூறும் பிரியங்கா, இதுதவிர பைரவி, வம்சம், என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி போன்ற தொடர்களிலும் பிசியாக நடித்து வருவதாக சொல்கிறார்.