ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தடகள வீரர் மில்கா சிங், சல்மான் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... ''நான் சல்மான்கானுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் ஒலிம்பிக் போட்டியில் சல்மானை நல்லெண்ண தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது ஏன்.? சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஒரு விளையாட்டு வீரரை அவர்கள் நல்லெண்ண தூதராக நியமிப்பார்களா? இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேசமயம், நடிகை ஹேமமாலினி போன்ற திரை நட்சத்திரங்கள் சல்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சல்மானின் அப்பாவான சலீம்கான், தன் மகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சலீம்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
என் மகன் சல்மான் பாலிவுட் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு நீச்சல் வீரர், சைக்கிளிஸ்ட் மற்றும் பளுதூக்கும் வீரரும் கூட. அவர் போட்டிகளில் வேண்டுமானால் பங்கேற்காமல் இருக்கலாம், ஆனால் அவரும் ஒரு விளையாட்டு வீரர் தான். மேலும் மில்காஜி, உலகின் மிகப்பெரிய சினிமா துறை இந்த பாலிவுட், மக்களால் மறக்கப்பட்ட உங்களை மீண்டும் புத்துயிர் கொடுத்தது இந்த சினிமா தான் என்று கூறியுள்ளார்.