தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் சாலையோரம். பி.வாசுவின் உதவியாளர் கே.மூர்த்தி கண்ணன் இயக்கி உள்ளார். ராஜ், ஷெரீனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சிங்கம்புலி வில்லனாக நடித்துள்ளார். படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துத்திருக்கிறது.
இது பற்றி மூர்த்தி கண்ணன் கூறியதாவது: படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். மனிதன் கழிவை மனிதன் அள்ளும் கொடுமை நம் நாட்டில்தான் அதிமாக இருக்கிறது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என்று பாராட்டினார்கள். வரிவிலக்குகிற்கு விண்ணப்பித்தோம். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே வரிவிலக்கு கொடுத்தார்கள். நாம் அன்றாடம் சாலையில் நடக்கும் போது சாக்கடை குழிக்குள் இறங்கி வேலை செய்யும் மனிதர்களை எளிதாக கடந்து விடுகிறோம். அந்த மனிதர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. காதல் இருக்கிறது. இன்ப, துன்பம் இருக்கிறது என்பதை சொல்கிற படம். வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. என்றார் மூர்த்தி கண்ணன்.