தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், சமந்தா நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவரது 150வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு கத்திலான்டோடு என பெயரிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் விவி விநாயக் இப்படத்தை இயக்கவுள்ளார்.
நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் பூஜை ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். ஆனால் படப்பிடிப்பை மே மாதத்திற்கு பின்னர் துவங்கலாம் என சிரஞ்சீவி கூறியுள்ளாராம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க சிரஞ்சீவி அறிவுறுத்தியுள்ளாராம். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றார்.