மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'குக்கூ' பட டைரக்டர் ராஜூமுருகன் இயக்கியுள்ள ''ஜோக்கர்'' படத்தில் மூன்று பாடல்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. அதில் ஒன்றுதான் என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம் -என தொடங்கும் பாடல். இந்த பாடல் எழுதியது பற்றி யுகபாரதி கூறும்போது,
15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் டைரக்டர் ராஜூமுருகனின் அண்ணன் சரவணனும் தஞ்சை வீதிகளில் இடது சாரி மேடைகளில் இன்னொரு பத்து ஆண்டுகளுக்குள் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடக்கும் என்று சுற்றிக்கொண்டிருந்தோம். நாங்கள்தான் அந்த புரட்சியை செய்யப்போகிறோம் என்கிற மாதிரி எங்களுக்குள் ஒரு எண்ணம். அதையடுத்து ஒரு 15 வருடத்திற்கு பிறகு எந்த மாற்றமும் வராது. அரசியலும், சமூகமும், இலக்கியமும் எந்த மாறுதலை யும் தனக்குள் ஏற்றுக்கொள்ளாது என்று நினைத்து, சினிமாவில் சேரலாம் என்ற கனவோடு சென்னைக்கு வந்தோம். சரவணன்தான் எனக்கு டிக்கெட் போட்டு அழைத்து வந்தார்.
சென்னைக்கு வந்த பிறகும் என்னவாகப் போகிறோம் என்பது எனக்கு தெரியாது. பாட்டு எழுதப்போகிறோமா இல்லை தொடர்ச்சியாக கவிதை எழுதப்போகிறோமா என்று தெரியாமல் எந்த முன்யோசனைகளும் இல்லாமல்தான் நான் இருந்தேன். இந்த மேடையில் நின்று கொண்டு இப்போது சொல்கிறேன். என் னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம். கேள்வி கேட்க ஆளில்லாம் போடுதிங்கே கொட்டம் -என்ற பாடலை எழுதுவதற்காகத்தான் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டேன். எனது இலக்கை இப்போதுதான் அடைந்திருக்கிறேன் என்கிறார் யுகபாரதி.