தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காந்தியடிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர், என, நடிகர் கமல் ஹாசன் பேசினார். கோவை, சப்னா புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், காந்தியின், சத்திய சோதனை புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிறுவனத்தின் இயக்குனர் நிதின் ஷா தலைமை வகித்தார். நடிகர் கமல் ஹாசன் புத்தகத்தை வெளியிட, பாரதிய வித்யா பவன் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர் பெற்றுக் கொண்டார்.
விழாவில், நடிகர் கமல் ஹாசன் பேசியதாவது: காந்தி, இந்தியாவின் சின்னமாக திகழ்ந்தவர். அவர் ஒரு தலைவரே கிடையாது; தொண்டர். பதவியை செருப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; கிரீடமாக அல்ல. காந்தியையும், கட்சியையும் ஒன்றாக பார்க்காதீர்கள். அதையெல்லாம் கடந்தவர் அவர். காந்தியின் கணக்கும், பொருளாதாரமும் இப்போது பேசப்பட்டு வருகிறது. காந்தியின் கணக்கு என்பது, பண்டமாற்று தத்துவம் தான். இப்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு, காந்தியை பற்றி நினைக்க நேரமில்லை.
ஓட்டு சேகரிக்கவும், பதவியை பிடிக்கவும், அடுத்தவனை வீழ்த்தவும் மட்டுமே இன்று நேரம் இருக்கிறது; அவர் கொள்கைகளை கற்றுத் தர நேரமே இருப்பதில்லை. இன்று, தொடத்தகு நோய் என்று ஒன்றுமே இல்லை; அரசியலையும், மதத்தையும் தவிர. இவ்வாறு நடிகர் கமல் ஹாசன் பேசினார். பின், விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல் ஹாசன் கூறுகையில், நடிகர் சங்கம் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை, என்றார்.
விழாவில், கவிஞர் புவியரசு, துார்தர்ஷன் கேந்திரா நிகழ்ச்சி அமைப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.