ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரங்கூன் பட சூட்டிங்கின் போது சைப் அலிகானுக்கும், ஷாகித் கபூருக்கும் இடையே உரசல் இருந்ததாக முன்னர் கூறப்பட்டது. சமீபத்தில் இது பற்றி கரீனா கபூர் கானிடம் கேட்ட போது, அப்படியா? உண்மையில், எனக்கு தெரிந்த வரையில் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. நான் அந்த சூட்டிங் செட்டுக்கு போகவில்லை. எனக்கு அதற்கு நேரம் இல்லை. இரவு நேரங்களில் நானும் பயணத்தில் இருப்பேன். அவர்களும் பயணத்தில் இருப்பார்கள். அப்படி ஒரு பரபரப்பாக இருப்போம். இருந்தும் செட்டில் நடந்த சுவாரஸ்யமான, நகைச்சுவையான விஷயங்களை சைப் என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஷாகித்திடம் பேசுவது அவருக்கு பிடிக்கும். ஷாகித் ஒரு நல்ல மனிதர் எனவும் கூறுவார். அப்படி இருக்கும் போது அவர்களுக்குள் உரசல் எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை. சைப் ரொம்ப அமைதியான ஆள். அவரும் ஷாகித்தும் சினிமா துறையில் பல வருடங்களாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது அனைவரும் அவர்களை பற்றியே பேசுவது ஏன் என எனக்கு தெரியவில்லை என்றார். ரங்கூன் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.