தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு பக்கம் தேர்தல் சூடு, மறு பக்கம் வெயில் சூடு தமிழ்நாட்டை தகதகவென எரித்துக் கொண்டிருக்க, நேற்று சமூக வலைத்தளங்களில் ஜி.வி.பிரகாஷ் கிளப்பிய வெளிப்படையான விஜய் ஆதரவு நிலை முதலில் சொன்ன இரண்டு விஷயங்கள் கிளப்பின அனலை விட அதிகம் கிளப்பின. ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று அதிகமாக விரும்பப்படும் ஆண் 2015 என்ற ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, அதில் தனுஷ்தான் முதலிடம் பெற்றார் என அவருடைய சிறப்புப் பேட்டியுடன் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் இசையமைப்பாளரும், ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ், அந்தக் கருத்துக் கணிப்பில் விஜய்தான் முதலிடம் பிடித்திருந்தார். விஜய்யின் பேட்டி ஒன்றை ஏற்பாடு செய்து தரமுடியுமா என்றும் அந்தப் பத்திரிகையின் நிருபர் என்னிடம் கேட்டார் என அதற்கான 'மெசேஜ்' ஆதாராத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு டிவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும், விஜய்யை ஆதரித்ததால் ஜிவி.பிரகாஷை எதிர்த்து அஜித் ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனுஷுக்கும் ஜிவி.பிரகாஷுக்கும் இடையே இருந்த பனிப் போர் நேற்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு கட்டத்தில் தரக் குறைவான வார்த்தைகளுடன் தனுஷை மறைமுகமாகவும் திட்ட ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தனுஷை அதிகமாக விரும்பப்படும் ஆண் 2015 என்ற பட்டத்துக்கு தேர்வு செய்ததை ஜி.வி.பிரகாஷ் நேரடி வார்த்தைகளில் திட்டாமல், விஜய் ஆதரவு நிலையை எடுத்து தன் கோபத்தையும், எரிச்சலையும் கொட்டித் தீர்த்துவிட்டார்.
அஜித் ரசிகர்கள் சிலர் ஜிவி.பிரகாஷைத் திட்ட ஆரம்பிக்க அவர்களையும் ஜிவி விட்டு வைக்கவில்லை. நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என பல ரசிகர்களுக்கு நேரிடையாகவே பதிலளித்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் ஜி.வி.பிரகாஷ் 22வது இடத்தையே பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 'டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற இரண்டு வெற்றிப் படத்தைக் கொடுத்த நாயகனாக புகழ் பெற்றிருந்தார். தனுஷ் நடித்த 'அனேகன், மாரி, தங்கமகன்' ஆகியவற்றில் 'மாரி' மட்டும்தான் சுமாரான வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது.
தனுஷுக்கும், ஜிவி.பிரகாஷுக்கும் இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது என்றாவது ஒரு நாள் வெளிவந்தே தீரும். ஆனால், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக மாறியதற்கு தனுஷின் ஏதோ ஒரு வெறுப்பான பேச்சுதான் காரணம் என்பது மட்டும் புரிகிறது.