ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இவ்வளவு மாற்றங்கள் செய்து வருவதை இதுவரை யாருமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். மணிரத்னம் படம் பற்றிய செய்தி என்பது அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். அவர் இதற்கு முன் இயக்கிய சில படங்களைப் பற்றிய விவரங்கள் கூட படம் முடிந்த பிறகுதான் வெளிவரும். அப்போதுதான் அட, இப்படி ஒரு படத்தை அவர் எப்போது எடுத்து முடித்தார் என்று ஆச்சரியப்பட்ட சம்பவங்கள்தான் அதிகம். அவர் யாரை நடிக்க வைத்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பட விளம்பரங்களில் அவர் பெயரைப் பார்த்ததுமே படத்தைச் சென்று பார்க்கும் ரசிகர்களும் இன்றும் இருக்கிறார்கள்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்கப் போவதாகச் சொல்லப்படும் படம் பற்றிய தகவல்கள் கடந்த ஆறு மாத காலமாக அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றன. துல்கர், மம்முட்டி என கேரளாவில் ஆரம்பித்து, ஆந்திராவில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா என அந்தப் பக்கம் போய், அப்புறம் ஐஸ்வர்யா ராய் என பாலிவுட்டையும் விட்டு வைக்காமல் மீண்டும் தமிழ்நாட்டுப் பக்கம் வந்தது.
கார்த்தியும், 'பிரேமம்' புகழ் சாய் பல்லவியும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என ஏறக்குறைய உறுதியான செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதிலும் திடீர் மாற்றம். சாய் பல்லவி இல்லை அவருக்குப் பதிலாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கெனவே 2003ல் வெளிவந்த மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற 'சிருங்காரம்' என்ற தமிழ்ப் படத்தில் நடித்தவர்.
அதிதியாவது தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நிலைப்பாரா அல்லது அடுத்து வேறு யாரையாவது மாற்றுவார்களா என்பது, மணிரத்னத்திற்கு மட்டுமே தெரியும்.