கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
'தெறி' திரைப்படத்தை வெளியிடுவதில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் போக்கு எழுந்தது. அதைத் தொடர்ந்து 'தெறி' திரைப்படத்தை வெளியிட மறுத்த செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரையரங்குகளுக்கு ஒத்துழைப்பு தரப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதனால் இன்று வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் 'தெறி' படத்தைத் திரையிட மறுத்த தியேட்டர்களுக்கு தரக் கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.
ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளை மீறி 'வெற்றிவேல், என்னுள் ஆயிரம், ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களைத் அந்தத் திரையரங்குகளில் திரையிடுகிறார்கள். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவை அவர்கள் மீறியிருக்கிறார்கள். இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவை 'மனிதன்' படத்தின் தயாரிப்பாளரான உதயநிதியும் ஏற்க மறுத்துவிட்டார். தனது படங்களுக்கு வரி விலக்கு பிரச்சனை வந்த போது தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், 'மனிதன்' படம் அடுத்த வாரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தங்களது உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா ? அல்லது திரையரங்க உரிமையாளர்களுடன் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தையின் படி முடிவை எடுக்குமா என்பதை திரையுலகத்தினரே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.