மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பூ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் பி.ஜி.முத்தையா. கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி, சகுனி, சேட்டை, சண்டிவீரன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ராஜா மந்திரி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
எனது கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு படம் தயாரிக்கும் கனவு இருந்து வந்தது.அதற்கு நாங்கள் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு நான் முழுக்க முழுக்க ஒளிப்பதிவில் கவனம்செலுத்தி வந்தேன். இப்போது மீண்டும் ஓர் புதிய முத்தையாவாக தயாரிப்பில் அடியெடுத்து வைத்ததற்கு மிக முக்கியகாரணம் இயக்குனர் உஷா கிருஷ்ணன் எனக்கு அளித்த நம்பிக்கைதான். ராஜா மந்திரி கண்டிப்பாக அனைவரையும் கவரகூடிய திரைப்படமாக அமையும். ஏனென்றால் மற்ற கிராமத்து கதைகளில் இருந்து ராஜா மந்திரி முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டது. திரைப்படத்தை காண வரும் ஒவ்வொருவரும் தங்களின் கதாப்பாதிரங்களைதிரையில் உணருவர்" என்றார் முத்தையா.