ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 3-இடியட்ஸ். இப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் என்ற பெயரிலும் வெளியானது. இந்நிலையில் 3-இடியட்ஸ்-2 வை உருவாக்க இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. அமீர்கானும் இதை ஒரு பேட்டியின் போது சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்போது நடிகர் சர்மான் ஜோஷியும் 3-இடியட்ஸ் 2 உருவாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சர்மான் ஜோஷி கூறியுள்ளதவாது... ராஜ்குமார் ஹிரானி 3-இடியட்ஸ்-2க்கான கதையை உருவாக்கி வருவதாக கூறினார். ''3 அமீர்கான், மாதவன் மற்றும் நான் மீண்டும் நடிக்கிறோம். இடியட்ஸ் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது, அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.