பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கில் நம்பர்-ஒன் நடிகையாக இருந்து விட்டு அஞ்சான் படம் மூலமாக தமிழுக்கு மீண்டும் என்ட்ரி கொடுத்தார் சமந்தா. அதோடு, யாருமே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு டூ-பீஸ் நாயகியாகவும் உருவெடுத்து இளசுகளை திக்கு முக்காட வைத்தார். அதனால் அந்த படம் தோல்வியடைந்தபோது, கவர்ச்சியை முன்வைத்து சமந்தா வெற்றி பெற்றார். அதற்கடுத்தபடியாக விஜய்யுடன் கத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். அதோடு, விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் பெரிய ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அவர் அதிகமாக எதிர்பார்த்த பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய படங்கள் அதிர்ச்சி தோல்வி கொடுத்தன. அதனால் தமிழை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று மீண்டும் தெலுங்கில் காலூன்றிய சமந்தா, தற்போது தமிழ், தெலுங்கில் சம அளவில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில, விஜய்யுடன் நடித்து சமீபத்தில் வெளியான தெறி ஹிட் படமாகியிருப்பதால் மீண்டும் உற்சாக மனநிலையில் இருக்கிறார் சமந்தா. அதோடு, விஜய் படங்கள்தான் தனக்கு வெற்றியாக அமைந்து எனது மார்க்கெட்டை உயர்த்தி வருகிறது என்பதால் தொடர்ந்து அவருடன் நடிக்க வேண்டும் என்பதில் இருக்கிறேன் என்று கூறி வரும் சமந்தா, என்னைப்பொறுத்தவரை விஜய் படமென்றாலே ஹிட் உறுதிதான் என்று நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார்.