தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. அந்த படத்தில்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் பின்னர் கெளதம்மேனன் - ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி பல படங்களில் தொடர்ந்தது. பிறகு சில படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானிடமும் சென்றார் கெளதம்மேனன். அந்த வகையில், கெளதம்மேனன் இதுவரை இயக்கிய படங்களுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் மட்டுமே இசையமைத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் நிலையில், அதைத் தொடர்ந்து தனுஷை வைத்து கெளதம்மேனன் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக ஒரு புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. அச்சம் என்பது மடமையடா படத்திற்கு இசையமைப்பதில் ரகுமான் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொண்டதால் அடுத்த படத்தையும் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று இந்த முடிவை கெளதம்மேனன் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த செய்தி உண்மையானால், கெளதம்மேனனுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைகிற முதல் படம் என்னை நோக்கி பாயும் தோட்டாவாகத்தான் இருக்கும்.