Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜோக்கர்' ஓடும் ஓடாது என்ற அக்கறை எனக்கில்லை: ராஜூமுருகன்

20 ஏப், 2016 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Rajumurugan-speech-at-Joker-Audio-launch

குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் அதையடுத்து இயக்கியிருக்கும் படம் ஜோக்கர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா இன்று(ஏப்.,20) மதியம் சென்னையில் நடைபெற்றது. டைரக்டர் பாலா ஆடியோவை வெளியிட, டைரக்டர் வெற்றிமாறன் ஆடியோவை பெற்றுக்கொண்டார்.


அப்போது ஜோக்கர் படம் குறித்து ராஜூமுருகன் பேசும்போது, நான் எப்போதுமே எனக்கு ஒரு நல்ல விசயம் நடக்கும்போது, கண்ணன் சார், லிங்குசாமி சார் ஆகிய இருவரையும் நினைத்துக்கொள்வேன். இந்த படத்தை சுதந்திரத்துடன் எடுக்க ஒரு நல்ல கரம் தேவைப்பட்டது. அந்த சுதந்திரத்தை கொடுத்து படத்தை எஸ்.ஆர்.பிரபு எடுத்துள்ளார். அவருக்கு நன்றி என்ற வார்த்தையை தாண்டி ஏதாவது இருந்தால் சொல்லிக்கிறேன்.


மற்றபடி இந்த ஜோக்கர் படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த படம் ஓடும் ஓடாது, பிடிக்கும் பிடிக்காது என்பதைப்பற்றி எந்த அக்கறையும் எனக்கு இல்லை. அதுமேல எனக்கு பெரிய நம்பிக்கையும் கிடையாது. எந்த தாட்டுமே எனக்கு இந்த ஸ்கிரிப்டு எழுதும்போதும் இல்லை. இப்பவும் இல்லை. இது ரொம்ப எளிமையான சின்ன படம். இந்த படம் சில விசயங்களை கிரியேட் பண்ணும் அப்படின்னு நான் நம்புறேன். முதல் விசயம், நம்ம நாட்டோட கருத்து சுதந்திரத்தின் எல்லையை அதிகப்படுத்தனும்னு நெனக்கிறேன்.


இங்கே மார்க்கெட் செய்யுறவங்க, ஓட்டு கேட்கிறவங்க என எல்லோருமே யாரை டார்க்கெட் பண்றாங்கன்னா, எதுவும் தெரியாத 6 கோடி மக்களைத்தான். அடிப்படை அறிவு இல்லாத அல்லது புரிதல் இல்லாத 6 கோடி மக்கள்தான் அவர்களது டார்க்கெட்டாக உள்ளது. சுதந்திர போராட்டத்துல 30 கோடி பேருல 2 கோடி பேர்தான் பங்கெடுத்துக்கிட்டாங்க, அப்படித்தான் இன்னைக்கும் 100 கோடி பேருல பத்து கோடி பேர்தான் தெளிவா இருக்காங்க. எதையும் கண்டுகொள்ளாத அல்லது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் மக்களை மட்டுமே டார்க்கெட்டாக வைத்து ஒரு பவர் செயல்படுகிறது. அதை நோக்கி ஒரு கேள்வி கேட்ட திருப்திதான் இந்த படத்தில் எனக்கு கிடைத்துள்ளது.


பாடலாசிரியர் யுகபாரதியின் தந்தை பரமசிவம் அவர்கள் தஞ்சாவூர் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளராக இருந்தவர். அவர்களது வீட்டில் இருந்த கம்யூ. சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். அங்கிருந்துதான் எனக்கு அந்த அறிவு வந்தது. மேலும், இந்த ஆல்பத்தில் அரசியல் மேடை, கூத்துகளில் பாடும் கலைஞர்களை தர்மபுரியில் இருந்து அழைத்து வந்து பாட வைத்திருக்கிறோம். இந்த படத்தின் ஒரு பாடலில் கேள்விகளாக இருக்கும், ''எவரோ விதைத்த வயல், விதைத்தவர் மறித்த பின்னும், பசித்தவன் உயிர்ப்பான் அவனால், அவனே என் தோழன், எவரோ நெய்த உடை, மறித்த பின்னும் வறியவன் வாழ்வான் அவனே என தோழன்..'' என்று அந்த பாடல் இருக்கும். இந்த படமும் அதுதான் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in