சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
கோவையில் குடியிருக்கும், நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி, தொந்தரவு செய்த, ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார். கோவை - அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகள் ஹேமலதா, 47, கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். இவரின் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கோவை, பி.என்.பாளையம், டி.பி.எப்., வீதியை சேர்ந்த ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கதிர்வேலு, 41, நிலம் வாங்குவது தொடர்பாக, ஹேமலதா வீட்டுக்கு சென்ற போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமான கதிர்வேலு, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு, ஹேமலதாவை வற்புறுத்தியுள்ளார். ஹேமலதா மறுக்கவே, அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். ஆத்திரமடைந்த ஹேமலதா, ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் படி, கதிர்வேலு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.