ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசை படத்திற்கு பிறகு இனிமேல் டைரக்சனில் இறங்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதனால் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் ஒரு பாடலில் நடித்த அவர், இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இறைவி படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார். இதே படத்தில் அவருடன் நடித்துள்ள விஜயசேதுபதி, பாபி சிம்ஹா இருவரும் எஸ்.ஜே.சூர்யாவின் ரியல் கேரக்டர் பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதில் பாபி சிம்ஹா, எனக்கு எஸ்.ஜே.சூர்யா என்ற ஒரு நல்ல அண்ணன் கிடைத்து விட்டார் என்று கூறுகிறார்.
மேலும், இந்த இறைவி படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கதை சொல்ல சென்றபோது, அவர் கதை சொன்ன விதம் அவருக்கு புரியவே இல்லையாம். என்றாலும், பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டு ஹிட் படம் கொடுத்தவராச்சே. நல்லாதான் எடுப்பார் என்றுதான் நடிக்க சம்மதித்தாராம். பின்னர் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தபோதுதான் ஒருநாள், முதல்ல எனக்கு கதையே புரியல, ஆனா இப்ப பார்த்தா நல்லாதான் இருக்கு என்று சொன்னாராம். அதைக்கேட்டு, அப்படின்னா என் கதை மேல நம்பிக்கையே இல்லாமல்தான் இத்தனை நாளும் நடிச்சீங்களா சார்? என்று அவரிடம் கேட்டாராம் கார்த்திக் சுப்புராஜ்.
அதையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு நல்ல டைரக்டரின் படத்தில்தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதலில் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே கொடுத்த ஹிட்டை நினைத்துதான் நடித்தேன். ஆனால் இப்போது இறைவி படத்தில் நடித்த பிறகு ஒரு நல்ல டைக்டரின் படத்தில் நான் நடிகனாக மீண்டும் என்ட்ரி ஆனது எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், பெரிய நம்பிக்கையும் கொடுத்துள்ளது என்றார் எஸ்.ஜே.சூர்யா.