தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம் ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''. ஜெயராம் புரடொக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை கணபதி பால முருகன் இயக்கியுள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சந்தானம், இயக்குனர்கள் சுசீந்திரன், சீனுராமசாமி, பேரரசு, பொன்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கவுண்டமணி பேசுகையில், இந்த படத்தில் நான் கிருஷ்ணன் என்றொரு கேரவன் உரிமையாளர் வேடத்தில் நடித்திருக்கிறேன். அது ஒரு நாத்திகவாதி வேடம். அதோடு காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு நல்ல வேடம். மொத்தத்தில் இது ஒரு நல்ல படம். குடும்பத்தோடு குழந்தை குட்டிகளோடு அனைவரும் வந்து பார்த்து என்சாய் பண்ண வேண்டிய படம். கணபதி பால முருகன் இந்த படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார்.
மேலும், சமீபகாலமாக சினிமாவின் நிலை ரொம்ப மோசமாக உள்ளது. ஒரு படம் பார்க்க ஈவினிங் காட்சிக்கு சென்றால் மேட்னி ஷோவோடு அந்த படத்தை எடுத்து விட்டோம் என்கிறார்கள். மார்னிங் ஷோவுக்கு போனால் நேற்றே அந்த படத்தை எடுத்து விட்டோமே என்கிறார்கள. அந்த அளவுக்கு தியேட்டர்காரர்களே படத்தை எடுத்து விடுகிறார்கள். இதனால் எந்த படத்தையும் பார்க்க நம்பி தியேட்டர்களுககு செல்ல முடியவில்லை. இந்த மாதிரி நிலைமை போய்க்கொண்டிருந்தால் சினிமா உலகம் மோசமான கட்டத்துக்கு போய் விடும். அதனால் சினிமா உலகைச்சேர்ந்தவர்கள் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.