'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
விஜய் ரசிகர்களுக்கு தமிழ்புத்தாண்டு விருந்தாக மாஸ் படமாக வெளியாகியிருக்கும் படம் 'தெறி'. அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று விதமான மாறுபட்ட கேரக்டரில் நடித்து வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் தெறி படத்தை ரிலீஸ் செய்த இயக்குநர் அமீருக்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஆகையால் தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக அமீர் தன் டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாக செய்தி வந்தது. ஆனால் இதை அமீர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன். எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை, என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, டுவிட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சிலர் தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அமீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.