வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ராம்கோபால் வர்மா, சர்ச்சைகளின் மொத்த உருவமாக இருக்கும் இயக்குனர். எப்போது, எதற்காக, என்ன பேசுகிறேன் என்று தெரியாமலேயே பேசுபவர், இல்லை இல்லை டிவீட்டுபவர். டிவிட்டரில் அதிக அளவில் சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் என இவரை மட்டும் தாராளமாகச் சொல்லலாம்.
சில தினங்களுக்கு முன் நடிகை எமி ஜாக்சன், ரஜினிகாந்துடன் இருக்கும் ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை தன்னுடைய கணக்கில் பதிவிட்டு, ரஜினிகாந்த் பற்றி சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் ராம்கோபால் வர்மா. அதில், “ஒரு நட்சத்திர பெருமைக்குரிய முக்கியமான தோற்றங்கள் அனைத்தையும் இந்த பெரிய மனிதர் மொத்தமாக அழித்துள்ளார். இவர் மோசமான தோற்றம் கொண்டவர், 6 பேக் இல்லை, முறையற்ற உடல்தோற்றம் கொண்டவர், நடனம் ஆடத் தெரியாதவர். இப்படிப்பபட்ட ஒரு மனிதர் உலகில் எங்குமே சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது. அவர் கடவுளுக்கு என்ன செய்தார், கடவுள் அவருக்கு என்ன செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு.
சினிமாவில் ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாததற்கு ரஜினி சார்தான் மிகப் பெரிய உதாரணம். இந்த உலகத்தில் உள்ள மனநல மருத்துவர்கள் கூட ரஜினியின் அதிசயம் பற்றி புரிய வைக்கச் சொன்னால் குழம்பி விடுவார்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ராம்கோபால் வர்மா கிண்டலடிக்கிறார் என நினைத்து ரஜினி ரசிகர்கள் அவருக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
ஆனால், ராம்கோபால் வர்மா, “சில அடிமுட்டாள் ரசிகர்கள் ரஜினிகாந்தை நான் பாராட்டுகிறேன் என்பது கூடத் தெரியாமல் உள்ளனர். ரஜினியின் முட்டாள் ரசிகர்கள் என்னுடைய டிவீட்டுகள் அவருக்கான 'காம்ப்ளிமென்ட்' என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ரஜினியே அவரைப் பற்றி சுவாரசியமாகப் பேசியதைப் பார்க்கட்டும்,” என ரஜினி பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, “என்னைப் பற்றித் தவறாகப் பேசும் அனைத்து ரஜினியின் முட்டாள் ரசிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய ஹிட் படங்களை விட நான் ரஜினியின் நிறைய 'பிளாப்' படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன்.
என்னுடைய டிவீட்டுகளை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதைப் பார்த்தால், பவர் ஸ்டார் ரசிகர்களை விட ரஜினி சாரின் ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பார் என்றே தோன்றுகிறது. ஜெய் ரஜினி, ஜெய் பவர் ஸ்டார்,” என்றும் நேற்று நள்ளிரவு வரை நக்கல் அடித்துள்ளார்.
என்ன நடந்ததோ இன்று காலை ரஜினியின் அழகான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு “இந்த பூமியில் உள்ள ஸ்டார்களுக்கெல்லாம் மட்டும் அவர் ஸ்டார் அல்ல, அதே சமயம் சொர்க்கத்தில் உள்ள ஸ்டார்களுக்கெல்லாம் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கூட பாராட்டை விட ராம்கோபால் வர்மாவின் நக்கல்தான் அதிகம் காணப்படுகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் அடுத்து என்ன சொல்லப் போகிறார்களோ ?....