வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்து வித்தியாசமான படமாகவும், சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. அதன் பின் வடிவேலு நாயகனாக நடித்த படங்களும் வெற்றியடையவில்லை. கடந்த 5 வருடங்களாக வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றம் இல்லாமலே இருந்தது.
இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக சில முறை பேச்சு வார்த்தைகள் நடந்தும் அது தள்ளிக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கரும் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். சிம்புதேவன் அதற்குப் பிறகு இயக்கிய படங்களில் 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அவர் விஜய் நாயகனாக நடித்து இயக்கிய 'புலி' படமும் தோல்வியடைந்தது.
தற்போது 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்க முன் வந்துள்ளது. இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். சிம்புதேவன் இயக்க வடிவேலு நடிக்க உள்ளார்.
இது பற்றி லைக்கா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் “வெள்ளைக் கொடிக்கு மீண்டும் வேலை வந்து விட்டதா”, எஸ் பிக்சர்ஸ், லைக்கா இணைந்து இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளது. என்டர்டெயின்மென்ட்டுக்கு உறுதி,” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தை விட இந்தப் படத்தை அதிக பொருட்செலவுடனும், பிரம்மாண்டமாகவும் எடுக்க உள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.