ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பெங்காலி நடிகையான இவர், அதையடுத்து அருள்நிதியின் ஆறாது சினம் படத்தில் நடித்தார். தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதுவரை இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டுகளில் நடித்த ஐஸ்வர்யா தத்தா. துருவாவுக்கு ஜோடியாக நடிக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தில் சிங்கிள் நாயகியாக லீடு ரோலில் நடிக்கிறார்.
மேலும், சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வந்தபோதும், ஏற்கனவே தான் செய்து வந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணியை தொடர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இதுபற்றி அவர் கூறுகையில், நான் கல்லூரியில் படித்தபோதே எல்ஐசி ஏஜென்டாகி விட்டேன். எனக்கு தெரிந்தவர்களிடம் பாலிஸி பிடித்துக்கொடுத்து வந்தேன். சினிமாவில் நடிக்க வந்த பிறகும் எனக்கு தெரிந்தவர்களிடம் பாலிஸி பிடித்து வருகிறேன். இந்த வேலையை நான் ஒருபோதும் விடமாட்டேன் என்று கூறும் ஐஸ்வர்யா தத்தா, இதை எதிர்காலத்தில் தனக்கு கீழே பலரை நியமித்து பாலிஸி பிடித்துக்கொடுக்கும் பெரிய நிறுவனமாக மாற்றும் ஐடியாவும் வைத்திருக்கிறாராம்.