ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் இயக்குனர் ராஜமௌலி, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு மாதம் பாகுபலி படக்குழுவிற்கு விடுமுறை வழங்கவுள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் துவங்க ராஜமௌலி திட்டமிட்டிருந்தாராம். ஏர்கூலர்களுடன் படப்பிடிப்பு நடந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தனது படக்குழுவிற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவித்துவிட்டாராம் ராஜமௌலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் முடிக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் VFX வேலைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது. 2017 ஏப்ரல் 14ல் பாகுபலி 2 திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.