ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகிஸ்தான் சிறையில் வாடி, அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர் இந்தியரான சரப்ஜித் சிங். இவரது வாழ்க்கை, இப்போது சரப்ஜித் என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரப்ஜித்தின் தங்கை ரோலான தல்பீர் கவுர் ரோல் மிகவும் பவர்புல்லானது, இதில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இப்படத்தில் நடித்தது மிகவும் பெருமை அளிப்பதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யாராய்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ''ஒரு நடிகராக இது போன்ற ஒரு வாய்ப்புகளுக்கு காத்திருக்க தான் வேண்டும். எனக்கு இப்படி ஒரு ரோல் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கான மேக்-அப் பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் சரப்ஜித் கதைப்பற்றி கூற முடியாது. இயக்குநர் ஓமங் குமார் உள்ளிட்ட இந்தப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் நடித்தது பெருமையளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
'சரப்ஜித்' படத்தில் சரப்ஜித் சிங்காக ரன்தீப் ஹூடாவும், அவரது தங்கை ரோலான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.