துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
கங்காரு, வந்தாமல, கோடைமழை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. அதையடுத்து சாரல் என்ற படத்தில் நடித்த அவர், தற்போது திருப்பதி லட்டு உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சாரல் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. முன்னதாக, ஏப்ரல் 20-ந்தேதி அப்படத்தின் இசை விழா சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற உள்ளது. படம் முழுக்க ஒரு காருக்குள் நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்ரீபிரியங்கா.
இந்த படம் குறித்து அவர் கூறுகையில், புதுமுக இயக்குனர் மணி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பேருந்து பயணத்தின்போது இருவருக்கிடையே காதல் மலர்கிறது. ஆனால் அந்த காதலை அவர்கள் சொல்லிக்கொள்வதற்கு முன்பே ஒரு விபத்து நடக்கிறது. அதையடுத்து என்ன நடக்கிறது என்பதை திரிலிங்காக சொல்லப்பட்டிருக்கும் படம் இது. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் அசார் நடித்துள்ளார். இருவருமே ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறோம்.
மேலும், இந்த படத்திற்காக நான் என்னை முழுசாக மாற்றி, கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த காதல் கதை இளவட்ட ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறும் ஸ்ரீபிரியங்கா, இந்த சாரல் படம் எனக்கு மனதளவில் நல்லதொரு திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.