ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி உலகமெங்கும் விஜய்யின் 'தெறி' படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் தெறி படத்தை 600 தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்கள் சிலர் செய்த பிரச்சனை காரணமாக கடைசியில் சுமார் 500 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆனது தெறி படம். வழக்கமாக பெரிய படங்கள் வெளியானால், அதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறெந்த முக்கியமான படங்களும் வெளியாகாது. இதை கருத்தில் கொண்டே சசிகுமார் நடிக்கும் வெற்றிவேல் படத்தை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், தெறி படத்தை வெளியிடாத தியேட்டர்களை அணுகி சசிகுமார் நடிக்கும் 'வெற்றிவேல்' படத்தை திரையிட ஒப்பந்தம் போட்டுள்ளனர். எனவே, ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, 'வெற்றிவேல்' படத்தை திடீர் திருப்பமாக ஒரு வாரம் முன்பாக, அதாவது வரும் வெள்ளிக்கிழமை அன்றே (ஏப்ரல் 22) வெளியிட உள்ளனர்.
தெறி படத்தை திரையிட்டுள்ள சில தியேட்டர்கள் ஒரு வாரம் கழித்து வெற்றிவேல் படத்துக்கு தியேட்டர் தருவதாக சொன்னதன் அடிப்படையிலும் முன்னதாகவே தியேட்டருக்கு வருகிறது வெற்றிவேல்.
இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் ட்விட்டரில், ''மிகவும் அரிதான ஒரு விஷயத்தை சினிமாவில் செய்துள்ளது வெற்றிவேல். ரிலீஸ் முந்தியுள்ளது... ஏப்ரல் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!'' என்று குறிப்பிட்டுள்ளார்.