தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அல்லு அர்ஜுனுடன் சரைனொடு, ராம் சரணுடன் துருவா போன்ற படங்களில் பிசியாகயிருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங்கை மீண்டும் கோலிவுட் பக்கம் அழைத்து வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் விஷால். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு ரூ 1 கோடி சம்பளம் தருவதாக விஷால் கூறியுள்ளாராம். துப்பறிவாளன் படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டே டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங்கை விஷால் அணுகியுள்ளார். விஷாலின் டீலுக்கு ராகுல் ப்ரீத்தி சிங் சம்மதம் தெரிவித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் ஜெகபதி பாபுவிற்கு ரூ 1.30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.