டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் படங்கள் என்றாலே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வெளி வராதோ என திரைப்பட ரசிகர்கள் கேட்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே விஜய் நடித்து வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் சிக்கல்களில் சிக்கி, தவித்து பின்னர் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால், முந்தைய படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை விட, தெறி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் யாரும் எதிர்பாராதது.
இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரமானதாகச் சொல்லப்பட்ட படம் இன்று வரை செங்கல்பட்டு ஏரியாவில் இன்னமும் முழுமையாக திரையிடப்படாமல் இருக்கிறது. படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு பிரச்னை தீர்ந்து வெளிவருமா என்று அந்தப் பகுதி விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி அன்றுதான் பட்டாசு வெடிக்க வேண்டும், பொங்கல் அன்றுதான் கரும்பு சாப்பிட வேண்டும், இரண்டு நாட்கள் கழித்து அவற்றை செய்தால் அந்தந்த நாட்களில் செய்யும் சுவாரசியம் இருக்காது. விஜய் நடித்து சிக்கலில் வெளியான சமீபத்திய படங்களை இங்கு பார்ப்போம்...
காவலன்
விஜய் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த காவலன் திரைப்படத்திலிருந்துதான் விஜய் படங்களுக்கான வெளியீட்டுச் சிக்கல்கள் ஆரம்பமானது. அந்தப் படத்தினை எதிர்த்து வினியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததும், கோவை தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட மாட்டோம் என்றும் குரல் எழுப்பினார்கள். ஒரு வரியாக அந்தக் சிக்கல்களைக் கடந்து படம் வெளிவந்து வெற்றி பெற்றது. ஆனால், அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக-தான் படத்திற்கு எதிராக பிரச்சனையைக் கிளப்பியது என்ற பேச்சும் எழுந்தது.
காவலன் படத்திற்குப் பிறகு வெளிவந்த வேலாயுதம், நண்பன் படங்கள் பெரிதாக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை, பெரிய அளவிலும் வெற்றி பெறவில்லை.
தலைவா
தலைவா பட வெளியீட்டின் போதும் பிரச்சனை ஏற்பட்டது. படத்தைத் திரையிட இருந்த தியேட்டர்களுக்கு படத்தை வெளியிட்டால் அந்தத் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த கடிதத்தை அடுத்து பாதுகாப்பு கருத்தி படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் திட்டமிட்டபடி வெளியான படம் தமிழ்நாட்டில் பத்து நாட்கள் கழித்தே வெளியானது. பட விளம்பரங்களில் Time To Lead என்று இருந்த வாசகம் ஆளும் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால்தான் படத்திற்கு சிக்கல் எழுந்தது என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
துப்பாக்கி
அதற்கடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கிறார்கள் என சில முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதன் பின் சில காட்சிகளை நீக்கிவிட்டு, சில வசனங்களை மியூட் செய்துவிட்டு படத்தை வெளியிட்டார்கள்.
கத்தி
கத்தி படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் படத்தை இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரித்ததால் இங்குள்ள தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. படம் வருமோ வராதோ என சந்தேகம் எழுந்தது. ஒரு வழியாக அனைவரிடம் பேசி சரி செய்து படத்தைத் திரைக்குக் கொண்டு வந்தார்கள்.
புலி
கத்தி படத்திற்குப் பிறகு புலி படம் ஒரு எதிர்பார்ப்புடன் வெளிவரத் தயாராக இருந்தது. பட வெளியீட்டிற்கு முந்தின நாள் படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித் துறை அதிரடி சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து படம் மாலை காட்சிகளில்தான் வெளியானது.
தெறி
இப்போது தெறி படம் செங்கல்பட்டு ஏரியா வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஏரியாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் வெளிவராத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குக் கூட ஒரு சில படங்களில்தான் வெளியீட்டுச் சிக்கல்கள் எழுந்தது. அஜித் எந்தப் பிரச்சனையிலும் சிக்க மாட்டார், எந்த பொது விஷயத்தைப் பற்றியும் பேச மாட்டார், எது நடந்தாலும் தலையிட மாட்டார், அவ்வளவு ஏன் அவருடைய படத்தை பற்றி கூட பேசமாட்டார். அதனால் அவருடைய படங்களுக்கு பெரிய சிக்கல்கள் வந்ததில்லை.
ஆனால், ரஜினிக்குப் பிறகு வசூலைக் கொடுக்கும் நாயகனாகப் பார்க்கப்படும் விஜய் படங்கள் தொடர்ந்து இப்படி சிக்கலில் தவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதோ என்றுதான பார்க்கத் தோன்றுகிறது.
அதற்கு விஜய்யின் அரசியல் ஈடுபாடு காரணமா அல்லது அவருக்கு இருக்கும் அளவுக்கதிகமான ரசிகர்கள் கூட்டமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்...!